கொரோனா தொற்று அச்சத்தில் மது அருந்தியவர்கள் மரணம்!

.jpg
.jpg

உலகை அச்சுருத்தும் கொரோனா வைரஸ் தொற்றினை குணப்படுத்த முடியும் என்ற நம்பிக்கையில் அதிக செறிவு கொண்ட கலவையற்ற மதுபானத்தை அருந்திய 6ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த சம்பவம் நேற்று ஈரானில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் மதுபானம் அருந்திய 3000 பேர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர் எனவும் அவர்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் அந்நாட்டு நீதித்துறை செய்தி பேச்சாளர் கோலம் ஹொசைன் எஸ்மெய்லி கூறியுள்ளார்.

கொவிட் – 19 தொற்று மது அருந்துவதன் மூலம் குணப்படுத்தலாம் என்ற தகவல் உண்மைக்கு புறம்பானது எனவும் அது ஆபத்தினை ஏற்படுத்தும் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.