இலங்கையில் தற்போது ஏற்பட்டிருக்கும் கொரோனா அச்சத்திற்கு மத்தியிலும், சில உயிரிழப்புக்கள் பொது மக்களிடையே கடுமையான தாக்கத்தினை ஏற்படுத்தியிருக்கிறது.
மக்களை விழிப்புடன் இருக்குமாறு அரசாங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.
கொழும்பு – ஹல்ஹிஸ பகுதியில் வாகனம் ஒன்றில் இருந்து சடலம் மீட்கப்பட்டுள்ளதாக காவல்த்துறையினர் கூறியுள்ளனர்.
காவல்த்துறையினருக்கு கிடைத்த தகவலை அடுத்து ஹல்ஹிஸ – சேரம் வீதியில் குறித்த சடலம் நேற்று (8) இரவு மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சடலம் தற்போது களுபோவில வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
சடலமாக மீட்கப்பட்ட நபர் கொரோனா வைரஸினால் உயிரிழந்திருப்பாரா என்ற சந்தேகமும் எழுந்துள்ளதையடுத்து மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.