கொழும்பில் சடலம் மீட்பு! கொரோனாவா?

c261b073 body  850x460 acf cropped
c261b073 body 850x460 acf cropped

இலங்கையில் தற்போது ஏற்பட்டிருக்கும் கொரோனா அச்சத்திற்கு மத்தியிலும், சில உயிரிழப்புக்கள் பொது மக்களிடையே கடுமையான தாக்கத்தினை ஏற்படுத்தியிருக்கிறது.

மக்களை விழிப்புடன் இருக்குமாறு அரசாங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.

கொழும்பு – ஹல்ஹிஸ பகுதியில் வாகனம் ஒன்றில் இருந்து சடலம் மீட்கப்பட்டுள்ளதாக காவல்த்துறையினர் கூறியுள்ளனர்.

காவல்த்துறையினருக்கு கிடைத்த தகவலை அடுத்து ஹல்ஹிஸ – சேரம் வீதியில் குறித்த சடலம் நேற்று (8) இரவு மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சடலம் தற்போது களுபோவில வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

சடலமாக மீட்கப்பட்ட நபர் கொரோனா வைரஸினால் உயிரிழந்திருப்பாரா என்ற சந்தேகமும் எழுந்துள்ளதையடுத்து மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.