மட்டக்களப்பில் சிறுவர் தினத்தை முன்னிட்டு துவிச்சக்கர வண்டி சவாரி

c1
c1

”பிள்ளையின் வெற்றிக்கு நட்பான நாடு” என்னும் தலைப்பில் இம்முறை சர்வதேச சிறுவர் தினம் அனுஸ்டிக்கப்படுகின்றது.

சர்வதேச சிறுவர் தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் மண்முனை வடக்கு பிரதேச செயலகமும் மக்கள் வங்கியும் இணைந்து ஏற்பாடு செய்த சிறுவர்களுக்கான துவிச்சக்கர வண்டி சவாரி இன்று காலை நடைபெற்றது.

மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரதேச செயலாளர் கே.வாசுதேவன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளின் மாணவ,மாணவிகள் கலந்துகொண்டனர்.

பிள்ளையின் வெற்றிக்கு நட்பான என்னும் தலைப்பில் அனுஸ்டிக்கப்படும் சிறுவர் தினத்தில் பிள்ளைகளின் உடல் ஆரோக்கியத்தினையும் அவர்களின் சுதந்திரத்தினையும் உறுதிப்படுத்தும் முகமாக இந்த துவிச்சக்கர வண்டி பவனி நடைபெற்றது.

பிரதேச செயலகத்தில் ஆரம்பமான இந்த துவிச்சக்கர வண்டி பவனி நகர் ஊடாக சென்று மீண்டும் பிரதேச செயலகத்தினை வந்தடைந்தது.

1856 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக் கிழமை ஆரம்பிக்கப்பட்ட சர்வதேச சிறுவர் தினம் உலகமெங்கும் ஜூன் 1ஆம் திகதியும் நவம்பர் 20ஆம் திகதியும் கொண்டாடப்படுகின்றது.

எனினும், இலங்கையில் ஒக்டோபர் மாதம் 1ஆம் திகதி சர்வதேச சிறுவர் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது.