கொரோனா தொற்று சந்தேகத்தில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்த கைதி தப்பியோட்டம்

3 oad 1
3 oad 1

கொரோனா தொற்று சந்தேகத்தில் சிகிச்சைக்காக காலி, கராப்பிட்டிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்த கைதி ஒருவர் அங்கிருந்து தப்பிச்சென்றார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காய்ச்சல், இருமல் காரணமாக குறித்த கைதி கராப்பிட்டிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்தார்.

அவருக்குக் கொரோனா தொற்றுப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டபோது அவர் பாதிக்கப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது.

இந்தநிலையில், குறித்த கைதி கொரோனா சிகிச்சைப் பிரிவிலிருந்து தப்பிச் சென்றுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாத்தறை சிறையிலிருந்து பூசா சிறைக்கு மாற்றப்பட்ட நிலையில் குறித்த கைதி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்தார்.

வீடு உடைத்து திருட்டில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில் அவர் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் எனத் தெரியவந்துள்ளது.