கடற்படையினரிடம் வசமான 23 நபர்கள்!

 1
1

கொரோனா அச்சம் காரணமாக தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகுமாறு வழங்கிய ஆலோசனையை மீறிய ஜாஎல – சுதுவெல்ல பகுதியை சேர்ந்த 23 பேரை கடற்படையினர் பொறுப்பேற்று தம்வசம் வைத்துள்ளனர்.

கடற்படையின் புலனாய்வு பிரிவினர் இன்று (10) நாள் முன்னெடுத்த சோதனை நடவடிக்கையின் போது அவர்கள் இவ்வாறு பொறுப்பேற்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

அவர்கள் ஒலுவில் தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்திற்கு அனுப்பப்படவுள்ளனர்.

அண்மையில் ஜாஎல – சுதுவெல்ல பகுதியில் சாரதியாக பணிபுரிந்த ஒருவருக்கு கொரோனா ரைவஸ் தொற்றுறுதியானதால் அவருடன் நெருங்கிய தொடர்பை பேணியவர்கள் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகுமாறு ஆலோசனை வழங்கப்பட்டிருந்தமை இங்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.