நாட்டின் அசாதாரண சூழ்நிலவும் நிலையில் கல்கமுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மோதல் சம்பவத்தினால் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு கூறுகின்றது.
குறித்த சம்பவம் கல்கமுவ பகுதியில் இடம்பெற்றுள்ளது.
மேலம் காணி உரிமை தொடர்பில் இடம்பெற்ற கருத்துமுரண்பாடு மோதலாக மாறியதை அடுத்து, பெண்ணொருவர் இரும்பு பொல்லால் தாக்கப்பட்டுள்ளார்.
இதன்போது படுகாயமடைந்த பெண் குருணாகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து உயிரிழந்துள்ளார்.
கல்கமுவ பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணையை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.