மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பன்குளம் பகுதியில் பெண்ணொருவர் நபர் மீது பொல்லால் தாக்கியுள்ளார்.
குறித்த நபர் படுகாயமடைந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
பன்குளம் பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதுடன், சம்பவம் தொடர்பில் சந்தேக நபரான பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேற்படி சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர் என தெரிவிக்கப்படுகிறது.