விபத்துக்குள்ளான நோயாளர் காவு வண்டி!

.jpg
.jpg

பொரளை பகுதியில் பேருந்து மற்றும் நோயாளர் காவு வண்டி என்பன மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ் விபத்து இன்று (10) சுமார் மதியம் 1.35 மணியளவில் பொரளை டி.எஸ்.சேனநாயக்க சந்திக்கு அருகே இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்தில் ஆறு பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

மருத்துவமனை ஊழியர்களை ஏற்றிச் சென்று கொண்டிருந்தது இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றும் இரத்தினபுரி மாவட்டத்தில் இருந்து வந்த நோயாளர் காவு வண்டி ஒன்றும் மோதியே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இவ் விபத்தில் காயமடைந்தவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறார்கள்.

இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள்.