இதுவரை 56 பேர் குணமடைவு; 147 பேர் வைத்தியசாலைகளில்

202003181232138417 Tamil News People with blood type A might be more susceptible to SECVPF 1
202003181232138417 Tamil News People with blood type A might be more susceptible to SECVPF 1

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் இருவர் குணமடைந்து இன்று வீடு திரும்பியுள்ளனர் என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

அதற்கமைய, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 56 ஆக அதிகரித்துள்ளது.

அந்தவகையில், இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றியதாக அடையாளம் காணப்பட்டுள்ள 210 பேரில் தற்போது 147 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 07 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அத்துடன் வைத்தியசாலைகளில் கொரோனா வைரஸ் சந்தேகத்தில் 154 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.