இலங்கைக்குள் நுழைவோரை தனிமைப்படுத்த வடக்கில் தீவொன்று தயார் நிலையில்!!

1 Islands North
1 Islands North

கொரோனா வைரஸ் தொற்று பரவிவரும் சூழலில் இலங்கைக்குள் கடல் வழியாக நுழைபவர்களை தடுக்க இலங்கை கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி, கடல் எல்லைகளைக் கண்காணிக்க கடற்படை மேற்பார்வை கப்பல்களும், விமானப்படையின் 6 விசேட விமானங்களும் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வரும் நிலையில் இந்தியர்கள் கடல் வழியாக இலங்கைக்கு நுழையாதிருக்கவும், அவ்வாறு யாரேனும் நாட்டுக்குள் உள் நுழைய முயன்று கைது செய்யப்பட்டால் அவர்களை தனிமைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்காக, வடக்கில் தனியான தீவொன்று தயார் நிலையில் உள்ளதாக கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரால் பியல் டி சில்வா தெரிவித்தார்.

வடக்கில் அமைந்துள்ள பாலைத் தீவில் தற்காலிக கட்டிடங்கள் அமைக்கப்பட்டு, சி.சி.ரி.வி பொருத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. எனவே, கைது செய்யப்படுபவர்கள் குறித்த தீவில் தனிமைப்படுத்தப்படலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.