இலங்கையில் தொற்றாளர்களின் எண்ணிக்கை திடீரென அதிகரிப்பு

7 gg
7 gg

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் நாட்டில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 218 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை நேற்று (திங்கட்கிழமை) மட்டும் 07 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 56 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்றும் 07 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் சுகாதார மேம்பாட்டு பணியகம் அறிவித்துள்ளது.

மேலும் நாடு முழுவதிலும் உள்ள வைத்தியசாலைகளில் கொரோனா வைரஸ் பரவியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் 117 பேர் சிகிச்சை பெருவருகின்றமை குறிப்பிடத்தக்கது.