காலி – கொழும்பு பிரதான வீதியில் தாதியர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்து!!

Capture 2
Capture 2

காலி – கொழும்பு பிரதான வீதியில் தாதியர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து சம்பவம் காலி-கொழும்பு வீதி வாத்துவ பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதன் போது பேருந்தில் பயணித்த எவருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

இருப்பினும் விபத்து குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.