இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் அமையப்பெற்றுள்ள பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கும் இலங்கை மாணவர்கள் தங்களை நாட்டிற்கு அழைத்து செல்லுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
சமூக வலைத்தளங்கள் வாயிலாக காணொளி ஒன்றை வெளியிட்டு அவர்கள் இந்த கோரிக்கையினை முன்வைத்துள்ளனர்.
லவ்லி ப்ரபெஃசனல் பல்கலைக்கழகத்தில் தாங்கள் கல்வி கற்று வருவதாகவும், அதில் மாணவர் ஒருவருக்கு கொரோனா தாக்கியுள்ளதை தொடர்ந்து பல்கலை நிர்வாகத்திற்குட்பட்ட பகுதி அவதானம் மிக்க பகுதியாக பிரகடன படுத்தப்பட்டுள்ளதாகவும் அந்த காணொளியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.