எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தலைமையில் இன்று மாலை இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.
கட்டுப்பணம் செலுத்தியுள்ள அரசியல் கட்சி பிரதிநிதிகள், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ள கட்சிகளின் பிரதிநிதிகள் இந்த கலந்துரையாடலுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
இதன்போது வேட்புமனு தாக்கல் மற்றும் தேர்தல் சட்டங்கள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, பொலிஸ் அதிகாரிகளுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு இடையில் இன்று சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.
இதன்போது வேட்பு மனுக்களை ஏற்றுக்கொள்ளும் தினத்தில் முன்னெடுக்கப்படும் பாதுகாப்பு நடைமுறைகள் குறித்தும் முக்கிய கவனம் செலுத்தப்படவுள்ளது.
எதிர்வரும் நவம்பர் மாதம் 16ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.