யாழ்ப்பாணம் மணல்காடு கடற்பரப்பில் 133 கிலோ 57 கிராம் கேரள கஞ்சாவுடன் மூன்று சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட கேரள கஞாவின் பெறுமதியானது சுமார் 2 கோடி என கடற்படையினர் தெரிவித்தனர்.
குறித்த கஞ்சா தொகையானது இந்தியாவிலிருந்து சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டுவர முயற்சிக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் மேலும் குறிப்பிட்டனர்.
சம்பவத்தில் கைது செய்யப்பட்ட நபர்கள் பருத்தித்துறை பகுதியில் வசிக்கும் 22, 26 மற்றும் 37 வயதுடையவர்கள் என கடற்படையினர் தெரிவித்தனர்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.