கொரோனா அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் இன்று தென்கொரியாவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது.
நாடு முழுவதும் 43.9 மில்லியன் மக்களுக்கு வாக்களிக்கும் தகுதி உள்ள நிலையில் இன்று தேர்தல் நடைபெறுகிறது.
வாக்குசீட்டு உள்ளவர்கள் மட்டுமே வாக்களிக்க அனுமதிக்கப்படுகின்றனர், மக்கள் வரும் போது மாஸ்குகளை அணிந்து கொண்டு வரவேண்டும்.
அதுமட்டுமின்றி ஒவ்வொருவருக்கும் ஒரு மீட்டர் இடைவெளியுடன் Temperature -களை பரிசோதனை செய்த பின்னர், கைகளை நன்றாக கழுவிய பின்னரும் அனுமதிக்கப்படுகின்றனர், வாக்களிக்கும் போது பிளாஸ்டிக் கை உறைகள் வழங்கப்படுகின்றன.
இது எங்களுடைய உரிமை, கடமையும் கூட என வாக்காளர்கள் காத்திருந்து வாக்களித்து விட்டு செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.