துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழப்பு!

Untitled 3
Untitled 3

மஹாஓ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, 96 சந்தி பிரதேசத்தில் துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று (14) இரவு வேளை இடம்பெற்றுள்ளது.

காதல் பிரச்சினை காரணமாக சம்பவத்தி்ல் இறந்தவருக்கும் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டவருக்கும் இடையே ஏற்கனவே வாக்குவாதம் நடைபெற்றுள்ளது.

சம்பவ இடத்திற்கு சகோதரருடன் வருகைத்தந்த சந்தேக நபர் மேற்படி துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறித்த சந்தேக நபர் தமது தாயாரின் சகோதரர் ஒருவரையே இவ்வாறு சுட்டு கொன்றுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

சம்பவத்தில் உயிரிழந்த நபர் 35 வயதுடையவர் என்பதோடு, சம்பவத்துடன் தொடர்புடைய 23 வயதுடைய இளைஞன் மற்றும் அவரது 22 வயதுடைய சகோதரையும் பொலிஸார் இன்று (15) காலை கைது செய்துள்ளனர்.

குறித்த இருவரையும் நாளைய தினம் தெஹியத்தகண்டிய நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.