நாட்டு மக்களுக்கு அரசினால் விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

government staff of sri lanka
government staff of sri lanka

நாட்டில் உள்ள பொதுமக்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ள்ள இக்கால கட்டத்தில் எதிர்கொள்ளும் சிரமங்களை பொறுப்புடன் பொறுத்துக்கொள்ளுமாறு அரசாங்கம் கோறியுள்ளது.

இதன் போது அத்தியாவசிய பொருட்களை மாத்திரமே கொள்வனவு செய்யுமாறும், தேவையற்ற பயணங்களை தற்போது தவிர்த்துக்கொள்றுமாறும் அரசாங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.

ஊரடங்கு உத்தரவு காலத்தில் பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்ட ஏனைய அனைத்து பொருட்களையும் வீடுகளுக்கே விநியோகிப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் தற்போது முன்னெடுத்துள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அத்தியாவசிய சேவைகளை தவிர வேறு எந்தவொரு நோக்கத்திற்காகவும் மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளதாகவும் ஜனாதி்பதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.