காய்கறிகளையும் மரக்கறி வகைகளையும் தூரப் பிரதேசங்களுக்கு கொண்டு செல்வதற்காக புகையிரதங்களை பயன்படுத்துவதற்கு அமைச்சர் மஹிந்த அமரவீர தீர்மானித்துள்ளார்.
இது தொடர்பில் போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர் புகையித திணைக்கள மற்றும் போக்குவரத்து அமைச்சின் அதிகாரிகளுக்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையில், விவசாயிகளிடமிருந்து பழங்கள் மற்றும் காய்கறி வகைகளை கொள்வனவு செய்யும் இரண்டாம் கட்ட பணிகள் இன்று (15) மற்றும் நாளை (16) ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய இடம்பெறவுள்ளது.
இந்த திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிகள் அனுராதபுரம், பதுளை, இரத்தி்னபுரி மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் நடைபெறவுள்ளதாக அரச தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.