கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரிற்கு நிதியளித்து உதவிய நடிகர்!

unnamed 1 7
unnamed 1 7

கொரோனா நோய் தொற்றால் உலகளவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 19 லட்சமாக உயர்ந்துள்ளது. இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டிவிட்டது.

இதனால் இந்தியாவில் நேற்றுடன் முடிவடைவதாக இருந்த ஊரடங்கு உத்தரவு மே 3 ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் சினிமா பிரபலங்கள் பலரும் மக்களுக்கு அரசு மூலம் நிவாரண நிதியளித்து உதவி வருவதோடு, தனியாகவும் மக்களுக்கு உதவி வருகிறார்கள்.

மும்பையில் ஹிந்தி சினிமாவின் பிரபல நடிகர் சஞ்சய் தத், மும்பை புறநகரில் கொரோனாவால் வேலையையிழந்து வாடும் 1000 குடும்பங்களுக்கு சாவர்கர் ஷெல்டர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து உதவி வருகிறாராம்.