மீண்டும் திறக்கப்பட்ட களுபோவில வைத்தியசாலை!

625.500.560.350.160.300.053.800.900.160.90 6
625.500.560.350.160.300.053.800.900.160.90 6

மூடிய நிலையில் காணப்பட்ட களுபோவில போதனா வைத்தியசாலையின் விடுதியொன்றின் ஒரு தொகுதி, இரண்டு வாரங்களின் பின்னர் திறக்கப்பட்டுள்ளது.

கொரோனா நோயாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து, குறித்த நோயாளருடன் தொடர்பை பேணிய வைத்தியசாலை பணியாளர்களும், தனிமைப்படுத்தல் காலத்தை பூர்த்தி செய்துகொண்டு இன்று (15) பணிக்குத் திரும்பியுள்ளதாக வைத்தியர் அசேல குணவர்தன கூறியுள்ளார்.

குறித்த வைத்தியசாலையில் இரு வாரங்களுக்கு முன்னதாக, கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நோயாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து, 15 நோயாளர்களும் வைத்தியசாலை பணியாளர்கள் 20 பேரும் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.