யாழ்.பலாலி தனிமைப்படுத்தல் முகாமில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்களில் 8 பேருக்கு கொரோனா தொற்று எவ்வாறு ஏற்பட்டது என்பதை தெளிவாக குறிப்பிட முடியாதுள்ளதாக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி குறிப்பிட்டுள்ளார்.
இன்று (15) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துரைத்த போதே அவர் இதனை தெரிவித்தார்.
இதேவேளை நுவரெலியாவில் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக வெளியிடப்படும் தகவல் உண்மைக்கு புறம்பானது எனவும் அவர் கூறியுள்ளார்.
நுவரெலியாவில் ஒருவருக்கு கொரோன தொற்று ஏற்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரப்படும் தகவல் குறித்து நுவரெலியா மாவட்டத்திற்கு பொறுப்பான பொறுப்பதிகாரி மறுப்பு தெரிவித்துள்ளார்.
நுவரெலியாவில் எவருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை என்றும் இன்று (15) காலை கிடைப்பெற்ற அறிக்கையிலும் அவ்வாறு எந்த தகவலும் இடம்பெற்றிக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.