இலங்கையின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு மாவட்ட மட்டத்தில் உள்ள தினசரி நடவடிக்கைகளை முன்னெடுக்கும் திட்டம் குறித்து ஆராய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றுள்ளது.
ஜனாதிபதி செயலகத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையின் தற்போதைய நிலை தொடர்பில் சுகாதார அதிகாரிகள் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.