அனுமதியளிக்கப்படாத வர்த்தக நிலையங்கள் திறக்கப்படுமானால் முற்றுகை!

.jpg
.jpg

ஊரடங்கு தளர்த்தப்படும் போது அனுமதியளிக்கப்படாத வர்த்தக நிலையங்கள் திறக்கப்படுமானால் அவற்றினை முற்றுகையிடப்படும் என மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன் எச்சரிகை விடுத்துள்ளார்.

மட்டக்களப்பு மாநகரசபையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

ஊரடங்கு சட்டம் நாளை (16) ஆம் திகதி தளர்த்தப்படும்போது கடந்த முறைபோன்ற நடைமுறைகள் பின்பற்றப்படும் எனவும் கூறியுள்ளார்.

கொரனா தொற்றினை தடுப்பதற்கு முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளுக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

குறிப்பாக பலசரக்கு நிலையங்கள், மருந்தகங்கள், பழம் விற்பனை நிலையங்கள் மட்டுமே ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும்போது திறப்பதற்கான அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளன எனவும் தெரிவித்தார்.

மேலும் ஏனைய வர்த்தக நிலையங்களை திறப்பதற்கு எந்த அனுமதியும் இல்லை. கடந்தமுறை இந்த கட்டுப்பாடுகளை மீறியவர்களுக்கு நடவடிக்கையெடுத்தோம் என அவர் தெரிவித்தார்.

இம்முறை அவ்வாறு கடைகள் திறக்கப்படுமானால் அக்கடைகள் முற்றுகையிட்டு மூடப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

வீதியோர வியாபாரங்கள் முற்றாக தடைசெய்யப்படுவதாகவும். இதற்காக மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் நான்கு பகுதிகள் விற்பனைக்கு ஒதுக்கப்பட்டுள்ளதன் அவர் தெரிவித்துள்ளார்.