உயர் நீதிமன்ற சட்டத்தரணி ஹிஜாஸ் கைது!

download 1 17
download 1 17

ஈஸ்டர் தினத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் உயர் நீதிமன்ற சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் உட்பட பலர் சி.ஐ.டி.யினரால் கைது.

கடந்த வருடம் ஏப்ரல் மாதம் (21) திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற குண்டு தாக்குதல் சம்பவம் தொடர்பில் நேற்று (14) இரவு முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியூதீனின் இளைய சகோதரரான ரியாஜ் பதியூதீன் புத்தளத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டிருந்தார்.

குறித்த சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் ரிஷாட்டின் சகோதரருக்கு மேலதிகமாக உயர் நீதிமன்ற சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் உட்பட பலர் சி.ஐ.டி.யினரால் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.