கொரோனா தொற்று காரணமாக இந்தியாவில் உலகின் குள்ளமான பெண் கொரோனா வைரஸ் தொடர்பான விழிப்புணர்வு செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளார் .
கொரோனா வைரஸின் தாக்கத்திற்கு இந்தியாவில் தற்போது வரை 11439 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் 1306 பேர் பூரணமாக குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். தற்போது வரை 377 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் மகாராஷ்ரா மாநிலத்தில் நாக்பூர் நகரைச் சேர்ந்த 2 அடி 6 அங்குலமுள்ள 26 வயதுடைய உலகிலேயே மிகவும் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்கே இந்திய பொலிஸாரின் உதவியுடன், கொரோனா தொடர்பான விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தியுள்ளார்.
அவர் பொலிஸாரின் வாகனத்தின் மீது நின்று கொண்டு இந்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இது தொடர்பான புகைப்படம் வைரலாகி வருகிறது. மேலும், வீடுகளை விட்டு மக்கள் வெளியேற வேண்டாம் என அவர் வேண்டுகோள் விடுத்து வருகிறார்.