கே.கே.எஸ் தனிமைப்படுத்தல் முகாமில் – எஞ்சியியோருக்கும் கொரோனா?

0 d
0 d

காங்கேசன்துறை தனிமைப்படுத்தல் நிலையத்தில் எஞ்சியுள்ளோருக்கும் கொரோனா தொற்று இருக்கக் கூடும் என்று யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் இன்று காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“காங்கேசன்துறை தனிமைப்படுத்தல் நிலையத்தில் மத போதகருடன் நெருங்கிய தொடர்பைப் பேணிய 20 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர். அவர்களில் 16 பேருக்கு இதுவரை தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


எஞ்சிய 4 பேருக்கும், நாளை சோதனை மேற்கொள்ளப்படவுள்ளது. அவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகம். இவர்களுக்கு தொற்று எப்படி ஏற்பட்டுள்ளது என்பதை உறுதியாகக் கூற முடியாது.

இருப்பினும் சோதனையில் கொரோனா தொற்று இல்லை என்றாலும், அவர்களுக்கு கிரமமாகத் தொடர்ந்து சோதனை முன்னெடுக்கப்படும்” – என்றார்.