ஊரடங்குச் சட்டத்தை மீறிய 30 ஆயிரத்து 631 பேர் கைது!

1556336828 curfew 2
1556336828 curfew 2

ஊரடங்குச் சட்டத்தை மீறிய 343 பேர் இன்று காலை 6 மணி தொடக்கம் நண்பகல் 12 மணி வரையான காலப்பகுதியில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அத்துடன் இவர்களிடமிருந்து 102 வாகனங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கடந்த மார்ச் மாதம் 20ஆம் திகதி தொடக்கம் இன்று நண்பகல் 12 மணி வரையான காலப்பகுதியில் ஊரடங்குச் சட்டத்தை மீறிய 30 ஆயிரத்து 631 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தக் காலப்பகுதியில் 7 ஆயிரத்து 892 வாகனங்களுக்கும் கைபப்பற்றப்பட்டுள்ளன.

இதேவேளை, கொழும்பு, யாழ்ப்பாணம், கம்பஹா, களுத்துறை, கண்டி மற்றும் புத்தளம் ஆகிய 6 மாவட்டங்களில் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

ஏனைய 19 மாவட்டங்களிலும் எதிர்வரும் 20ஆம் திகதி காலை 6 மணி வரை ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.