மாநகர சபை முதல்வர் பதவிக்காக டக்ளசுடன் கூட்டணி அமைக்க முயன்றாரா மணிவண்ணன்?

IMG 2108 600x400
IMG 2108 600x400

உள்ளுராட்சி சபைத் தேர்தல் முடிந்து யாழ். மாநகர சபையில் ஆட்சியைக் கைப்பற்றுவதற்காக டக்ளஸ் தேவானந்தாவுடன் கூட்டு வைக்கலாம் என்று மணிவண்ணன் தெரிவித்ததாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்குள் இருந்து தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்குள் உட்கட்சிப் பூசல் உச்சக் கட்டத்தை அடைந்துள்ளது.  கஜேந்திரகுமார்  அணியினர் மணிவண்ணன் தரப்புக்கு எதிராக  கடுமையான குற்றச்சாட்டுக்களை முன்வைத்துக்கொண்டிருக்கின்றனர்.

அதன் ஒரு அங்கமாக, யாழ். மாநகர சபை முதல்வர் பதவிக்காக மணிவண்ணன் அவர்கள் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழமக்கள் ஜனநாயக கட்சியுடன் கூட்டணி வைக்கவேண்டும் என்ற கருத்தை கட்சியின் கூட்டத்தில் முன்வைத்ததாகவும் கட்சியின் சட்ட ஆலோசகர் சுகாஸிடமிருந்து பலமான எதிர்ப்பு வந்ததன்பின்னரே மணிவண்ணன் பின்வாங்கியதாக தகவல்  ஒன்று கட்சியின் முக்கிய தரப்பினரால் வெளியிடப்பட்டுள்ளது.