இலிம்ப பகுதியில் இடம்பெற்ற கொலை சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்களை கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினர் (CID)யினர் கைது செய்துள்ளனர்.
குறித்த சம்பவம் கடந்த பெப்ரவரி மாதம் இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
டி 56 ரக துப்பாக்கி ஒன்றினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் பலியானதோடு மற்றொருவர் காயமடைந்திருந்தார்.
இந்நிலையில் இந்த சம்பவத்துடன் தொடர்புடையாதாக தெரிவிக்கப்பட்டே குறித்த சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டதாக காவல்துறை ஊடகப்பிரிவு கூறியுள்ளது.
மேலும் இவ்வாறு கைது செய்யப்பட்ட இருவரும் (32,34) வயதுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.