இலங்கையில் ‘கொரோனா’ தொற்று 254ஆக அதிகரிப்பு

4 ty
4 ty

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி நேற்று 10 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

ஒலுவில் தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்த 3 பேருக்கும், வெலிசறை தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து 6 பேருக்கும், ரம்புக்கனைப் பகுதியில் சுய தனிமைப்படுத்தலில் இருந்த ஒருவருக்கும் கொரோனா தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார்.

இதையடுத்து தொற்றுக்குள்ளாகியவர்களின் எண்ணிக்கை 254 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா  தொற்றுக்குள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 9 பேர் குணமடைந்து நேற்று வீடு திரும்பியுள்ளனர்.

அதற்கமைய இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 86 ஆக உயர்ந்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில், ஏனைய 155 பேரும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அத்துடன் மேலும் 103 பேர் வைத்தியசாலைகளில் கொரோனா வைரஸ் சந்தேகத்தில் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர் என்றும் சுகாதார அமைச்சு நேற்றிரவு 11.30 மணிக்கு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.