உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பின் மற்றொரு தாக்குதலும் நடக்கவிருந்தது!

1 rer
1 rer

கடந்த வருடம் நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்களுக்குப் பின்னர் மற்றுமொரு தாக்குதலும் நடக்கவிருந்தது எனப் பொலிஸ் நேற்று பரபரப்புத் தகவல் வெளியிட்டுள்ளது.

விசேட செய்தியாளர் மாநாட்டில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன இந்தத் தகவலை தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்கள் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட சிலரிடம் இருந்து இந்தத் தகவல் வெளிவந்தது எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஒருகட்டத்தில் புலனாய்வுப் பிரிவினரைக் குழப்பமடையச் செய்வதற்காக சஹ்ரான் குழு இரண்டாகப் பிரிந்தது போல் காட்டப்பட்டது எனவும் அவர் கூறினார்.

தெற்காசிய நாடொன்றில் தாக்குதல் நடத்திவிட்டு வரும் பயங்கரவாதிகளை இலங்கையில் வைத்து பாதுகாக்கவும் சஹ்ரான் குழு முயற்சிகளை செய்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.