தேர்தல் தொடர்பில் இன்று ஆணைக்குழுவில் மாநாடு!

1 er
1 er

இலங்கையில் கொரோனா வைரஸின் தாக்கத்தையடுத்து ஒத்திவைக்கப்பட்டிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலை எப்போது நடத்துவது தொடர்பில் ஆராயும் பொருட்டு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இன்று முக்கிய மாநாட்டை கூட்டவுள்ளார்.

ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் இந்தக் கூட்டத்துக்கு பொலிஸ் மற்றும் முப்படை உயர் அதிகாரிகளும், தேர்தல்கள் செயலக அதிகாரிகளும், பொதுநிர்வாக சேவை உயர் அதிகாரிகளும் அழைக்கப்பட்டுள்ளனர்.

தற்போதைய நெருக்கடி நிலையைக் கவனத்தில்கொண்டு தேர்தலை நடத்த முடியாத நிலை காணப்படுவதால் இதற்கு எத்தகைய மாற்று நடவடிக்கைகள் எடுப்பதற்குத் திட்டமிடப்பட்டு இருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.