தலதா மாளிகை திறக்கப்படுமா?

0 d 1
0 d 1

கண்டியில் ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் வரலாற்றுப் புனிதமிக்க கண்டி ஸ்ரீ தலதா மாளிகையை வழிபாட்டு நடவடிக்கைகளுக்காகத் திறப்பதற்கு இன்னும் சில நாள்கள் ஆகும் என தெரிவிக்கபப்ட்டுள்ளது.

இதனை தலதா மாளிகையின் தியவடனநிலமே பிரதீப் நிலங்க தெல தெரிவித்துள்ளார்.

வணக்கஸ்தலங்கள் திறக்கப்படுவது குறித்து, அரசாங்கத்தால் இதுவரை எவ்வித அறிவிப்புகளும் விடுக்கப்படாததன் காரணமாகவே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

வணக்கஸ்தலங்களுக்குச் செல்லுதல், கூட்டுப் பிரார்த்தனை நடத்துதல் திருவிழாக்களை நடத்துதல் என்பவற்றுக்கு, அரசாங்கம் தற்காலிக தடையுத்தரவைப் பிறப்பித்துள்ளது.

இந்நிலையிலேயே, தலதாமாளிகையும் பொதுமக்களின் பார்வைக்காக திறந்துவிடப்படுவது பிற்போடப்பட்டுள்ளது.