அடங்க மறுக்கும் கொரோனா;சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் எச்சரிக்கை

7 j
7 j

“இலங்கையில் கொரோனா வைரஸை இன்னமும் நாம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவில்லை. எனவே, பொதுமக்கள் தொடர்ந்தும் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். மக்கள் மிகவும் அவதானத்துடன் நடக்க வேண்டும். சிறந்த சுகாதார நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.”

  • இவ்வாறு கேட்டுக்கொண்டார் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்த வேண்டுகோளை விடுத்தார்.

அதுமாத்திரமன்றி, நாடு பூராகவும் வைத்தியசாலைகளை அண்மித்துள்ள சிறிய உணவகங்களை மறு அறிவித்தல் விடுக்கப்படும் வரை மூடுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

அத்துடன், அனைத்து விதமான உணவகங்களும் சுகாதார நடைமுறைகளை பேணுவதுடன், சுத்தமான சேவையை வழங்குமாறும் அவர் உத்தரவு பிறப்பித்தார்.

வாடிக்கையாளர்களுக்குத் தமது உணவகங்களில் உணவு உட்கொள்வதற்கான சந்தர்ப்பத்தை வழங்குவதை விடவும், அவர்களுக்கு உணவு எடுத்து செல்வதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.