வெலிசறைக் கடற்படை முகாமுக்குள் கொரோனா ஊடுருவிச் சென்றது எப்படி?

4 bbg
4 bbg

வெலிசறைக் கடற்படை முகாமுக்குள் கொரோனா வைரஸ் ஊடுருவியது எப்படி என்று கொரோனா வைரஸ் தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா விளக்கமளித்துள்ளார்.

“ஜா – எல, சுதுவெல்ல பகுதியில் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட போதைப்பொருள் பாவனையாளர்களைத் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துவதற்காகக் கடமையில் ஈடபட்டிருந்தபோதே வெலிசறைக் கடற்படை முகாமையைச் சேர்ந்த சிப்பாய்களுக்குக் கொரோனா தொற்று பரவியுள்ளது என்பது கண்டறியப்பட்டுள்ளது” என அவர் தெரிவித்துள்ளார்.

“வெலிசறைக் கடற்படை முகாமிலுள்ள அனைவருக்கும் பி.சி.ஆர். பரிசோதனை செய்யப்படும். விடுமுறையில் சென்றவர்களும் அழைக்கப்பட்டுள்ளனர். கடற்படைத் தளபதியின் கட்டளையின் பிரகாரம் குறித்த முகாம் மூடப்பட்டுள்ளது” எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.