பி.சி.ஆர். பரிசோதனையை அதிகரிக்க அரசு தீர்மானம்

6 P
6 P

கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதா என்பதை ஆராயும் பி.சி.ஆர். பரிசோதனைகளை அதிகரிக்க அரசு தீர்மானித்துள்ளது.

இதற்காக தனியார் வைத்தியசாலைகளின் பிரதிநிதிகளுடன் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி பேச்சு நடத்தியுள்ளார்.

அதன்படி நாட்டில் நாளொன்றுக்கு சுமார் ஆயிரம் பரிசோதனைகளைச் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி வருவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.