கல்முனையில் கிருமிநாசினி விசிறும் செயற்பாடு

IMG 20200424 113351 1
IMG 20200424 113351 1

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் கிருமிநாசினி விசிறும் செயற்பாடு கல்முனையில் தொடர்ச்சியாக பல்வேறு தரப்புகளால் முன்னெடுக்கப்பட்டுள்ளது

வெள்ளிக்கிழமை(24)  முற்பகல் கல்முனை மாநகர சபை பிரிவிற்குட்பட்ட மாதவன் வீதி ,குவாரி வீதி ,உடையார் வீதி, உள்ளிட்ட   பொதுமக்களின் வீடுகள், சிகையலங்கார நிலையங்கள், அழகு நிலையம் போன்றன கல்முனை மாநகர சபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் தலைமையில் தொற்று நீக்கி தெளிக்கப்பட்டது .

கல்முனை வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி   மற்றும் சுகாதார பரிசோதகர்களின் வழிகாட்டலில்  குறித்த செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.

மேலும் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஜீ.சுகுணனின் பணிப்புரைக்கமைய கல்முனை பிரதேசத்திலுள்ள சிகை அலங்கார மற்றும் அழகு படுத்தும் நிலையங்கள் மறு அறிவித்தல் வரை   மூடப்பட்டுள்ளது.

கொவிட் 19 வைரஸ் தொற்றுக்கள் சிகை அலங்கார மற்றும் அழகு படுத்தும் நிலையங்களின் ஊடாக பரவலாம் எனும் அச்சத்தின் காரணமாக பொது மக்களை பாதுகாக்கும் நோக்குடன் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.