தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் சடலமாக மீட்பு

8 gg
8 gg

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வலிகாமம் கிழக்கு பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் காணாமல் போயிருந்த நிலையில், இன்று காலை (25) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

வலிகாமம் கிழக்கு பிரதேசசபை உறுப்பினரான இ.செந்தூரன் என்பவரே இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அவரது மோட்டார் சைக்கிள், ஆள் அடையாள அட்டை ,நிறுத்தப்படட நிலையில் கைத்தொலைபேசி ,முக கவசம் என்பன வல்வெட்டித்துறை மயிலியதனைப் பகுதி கடற்கரையோரமாக நேற்று இரவு வல்வெட்டித்துறை பொலிசாரால் மீட்க்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இன்று காலை அவரது சடலம் கடற்கரையில் கரையொதுங்கியிருந்தது.

நேற்று காலை அவர் வீட்டிலிருந்து வெளியேறியதாகவும், முன்னதாக குடும்பத்தில் சச்சரவு ஏற்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதனால், அவர் கடலில் மூழ்கி தற்கொலை செய்து கொண்டாரா என்ற ரீதியிலும் விசாரணைகள் நடந்து வருகிறது.