யாழிலிருந்து 2ஆயிரம் பேர் சொந்த மாவட்டங்களுக்கு!

5 tt
5 tt

யாழ்ப்பாணம் மாவட்டத்துக்குப் பல்வேறு காரணங்களுக்காக வருகை தந்த வெளி மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 5 ஆயிரம் பேர் தங்களுடைய சொந்த மாவட்டங்களுக்கு விரும்புவதற்கு விண்ணப்பித்திருந்த நிலையில், கடந்த 5 நாட்களில் மாத்திரம் 2 ஆயிரம் பேர் சொந்த மாவட்டங்களுக்குத் திரும்பியுள்ளதாக, யாழ்ப்பாண மாவட்டச் செயலர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது:-

“கடந்த 20ஆம் திகதி தொடக்கம் நேற்று வரையில் பிற மாவட்டத்தைச் சேர்ந்த 5 ஆயிரம் பேர் தமது சொந்த இடங்களுக்குச் செல்ல அனுமதிக்கு விண்ணப்பித்திருந்தனர்.

இவ்வாறு விண்ணப்பித்தவர்களில் சுமார் 2 ஆயிரம் பேர் தமது சொந்த இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். அத்தியாவசியமாக செல்ல வேண்டியவர்களே அனுப்பப்பட்டுள்ளனர். அடுத்த கட்டமாக சிலர் அனுப்பப்படவுள்ளனர்.

அதேவேளை, அதி இடர் வலயமாக கருதப்படும் மாவட்டங்களுக்குச் செல்வதற்காக விண்ணப்பிப்பவர்கள் தற்போதைய நிலையில் அனுப்பப்பட மாட்டார்கள்” – என்றார்.