இலங்கையில் ‘கொரோனா’ பாதிப்பு 567 ஆக அதிகரிப்பு

3 ty5 1
3 ty5 1

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி 44 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதற்கமைய தொற்றுக்குள்ளாகியவர்களின் மொத்த எண்ணிக்கை 567 ஆக அதிகரித்துள்ளது.

இன்று அடையாளம் காணப்பட்டுள்ள 44 பேரும் வெலிசறை கடற்படை முகாமைச் சேர்ந்தவர்கள் என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றியதாக அடையாளம் காணப்பட்டுள்ள 567 பேரில் தற்போது 434 நோயாளிகள் 7 வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுவரை 126 பேர் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அத்துடன் 07 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, மேலும் 295 பேர் 32 வைத்தியசாலைகளில் கொரோனா வைரஸ் தொற்று சந்தேகத்தில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் என்று சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.