பவன் கல்யாண் படத்தில் சிவகார்த்திகேயன்

i3 5
i3 5

தெலுங்கில் தயாராகும் பெரிய ஹீரோக்களின் படங்களை தெலுங்கில் மட்டுமல்லாது தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் வெளியிட வேண்டும் என நினைக்கிறார்கள்.

‘பாகுபலி’ படங்கள் கொடுத்த வரவேற்புதான் அதற்குக் காரணம். அல்லு அர்ஜுன் அடுத்து நடிக்க உள்ள ‘புஷ்பா’ படத்தைக் கூட ஐந்து மொழிகளில் தயாரிக்கப் போகிறார்கள்.

பவன் கல்யாண் தற்போது நடித்து வரும் ‘வக்கீல் சாப்’ படத்திற்குப் பிறகு க்ரிஷ் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்க உள்ளார். இந்தப் படத்தில் உள்ள மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் தமிழ் நடிகர் சிவகார்த்திகேயனை நடிக்க வைக்க அணுகி உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமிழ் நடிகர் நடித்தால் படத்தை இங்கு வெளியிட வசதியாக இருக்கும் என்பதே அதற்குக் காரணம். ஏற்கெனவே ‘புஷ்பா’ படத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறாரா இல்லையா என்பது தெளிவாகாத நிலையில் அடுத்து சிவகார்த்திகேயன் ஒரு தெலுங்குப் படத்தில் நடிக்கப் போகிறாரா இல்லையா என்ற கேள்வி ஆரம்பமாகி உள்ளது.