கொரோனா தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த – விசேட பொலிஸ் அணி

43 1
43 1

வவுனியாவில் கொரோனா தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி அதனை கட்டுப்படுத்தும் செயற்பாட்டை முன்னெடுக்க விசேட பொலிஸ் அணி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

வவுனியா பொலிஸ் நிலையத்தில் வவுனியா , மன்னார் மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தலைமையில் குறித்த அணி உருவாக்கப்பட்டது.

21 பொலிசாரைக் கொண்ட இவ் அணி வவுனியாவில் கொரோனா தொடர்பான விழிப்புணர்வை மக்கள் மத்தியில் முன்னெடுக்கவுள்ளதுடன் , சரிநெரிவசல் மிக்க இடங்கள் ? சுய தனிமைப்படுத்தப்பட்ட வீடுகள் என்பவற்றில் தொற்று நீக்கி மருந்துகள் வீசி சமூகப் பாதுகாப்பை முன்னெடுக்கும் செயற்பாட்டை முன்னெடுக்கவுள்ளனர்.

குறித்த நிகழ்வில் வவுனியா இமன்னார் மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தம்மிக்க பிரியந்த ,சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் திஸாலடி சில்வா வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சீ.ஆர்.மானவடு மற்றும் பொலிஸ் அதிகாரிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.