இணையத்தின் வழி தொழிலாளர் தின நிகழ்வு

00 1
00 1

இணையத்தின் வழியாக இந்த ஆண்டின் சர்வதேச தொழிலாளர் தின நிகழ்வுகளை நடத்துவதற்கு ஜே.வி.பி தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது.

நாளைய தினம் முற்பகல் 10 மணிக்கு இணைய வழியாக இந்த மே தின நிகழ்வுகள் நடத்தப்பட உள்ளன.

மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணங்களை வழங்குவதற்கும், ஜனநாயகத்தில் கை வைப்பதற்கு அரசாங்கத்திற்கு இடமளிக்காமல் இருப்பதற்கும் வலியுறுத்தும் வகையில் இம்முறை மே தின நிகழ்வு நடத்தப்பட உள்ளதாக ஜே.வி.பி அறிவித்துள்ளது.

பத்தரமுல்ல – பெலவத்த பகுதியில் அமைந்துள்ள கட்சியின் தலைமையக் காரியாலயத்தில் நாளைய தினம் முகநூல் வழியாக இந்த மே தின நிகழ்வு நடாத்தப்பட உள்ளது.

ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, கட்சியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா, தேசிய தொழிற்சங்க மத்திய நிலையத்தின் தலைவர் கே.டி.லால்காந்த ஆகியோர் நேரலையாக முகநூலில் உரை நிகழ்த்த உள்ளனர்.