ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்காக தேர்தல் ஆணைக்குழுவில் இன்று(Oct.04) கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.
புதிய ஜனநாயக முன்னணியின் கீழ் அன்னம் சின்னத்தில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.
கட்டுப்பணம் செலுத்தும் போது அமைச்சர்களான அஜித் பி.பெரேரா, சுஜீவ சேனசிங்க ஆகியோருடன் புதிய ஜனநாயக முன்னணியின் செயலாளர் சட்டத்தரணி சர்மிளா பெரேரா ஆகியோர் கலந்து கொண்டனர்.