எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக இதுவரையில் 23 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியிருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட 12 அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களும், 11 சுயேச்சை வேட்பாளர்களும் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர். கட்டுப்பணம் செலுத்தியவர்களில் ஒரு பெண் வேட்பாளரும் அடங்கியிருப்பதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இன்று காலை தெரிவித்துள்ளார்.
வேட்பாளர்களின் எண்ணிக்கை இம்முறை அதிகரிக்கக்கூடும் என்றும் அவர் தெரிவித்தார்.