நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் நடைபெறப்போகும் ஜனாதிபதி தேர்தலில் பொது ஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டபாய ராஜபக்சவை ஆதரித்து வெற்றியடைய செய்வதற்கு தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன், முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) உள்ளிட்ட 14 கட்சிகள் இணைந்து இன்று (Oct.04) கொழும்பு பொதுஜன பெரமுன கட்சியின் தலைமை காரியாலயத்தில் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.