இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியாவிற்கு கல்விகற்க சென்ற மாணவர்களை அழைத்து வருவதற்காக ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானம் இன்று (8) அதிகாலை அங்கு அனுப்பப்பட்டுள்ளது.
குறித்த விமானம் மெல்போர்ன் நகரை சென்றடையவுள்ளது.
இதற்கமைய கற்றல் செயற்பாடுகளுக்காக சென்று அங்கு நிர்க்கதியாகியுள்ள இலங்கையர்கள் நாட்டுக்கு திரும்பவுள்ளனர்.