முல்லைத்தீவு நீராவியடி விவகாரத்தை கண்டித்து ரெலோ தலைமையில் யாழில் போராட்டம்

IMG 5021
IMG 5021

முல்லைத்தீவு நீராவியடியில் நடைபெற்ற சம்வபத்தைக் கண்டித்து நீதியை வலியுறுத்தி யாழ் நகரில் மாபெரும் போராட்டமொன்று இன்று சனிக்கிழமை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ அமைப்பின் ஏற்பாட்டில் யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் இன்று காலை இப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.

இதன் போது முல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார் கோவில் விவகாரத்தில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மீறி பௌத்த பிக்குவின் உடல் ஆலய முன்றலில் எரிக்கப்பட்டதை கண்டித்தும் அடாவடியில் ஈடுபட்ட ஞானசார தேரர் மற்றும் அவரது குழுவினரையும் கைது செய்யவேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டது.

இப் போராட்டத்தில் ரெலோ அமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் உட்பட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் பொது மக்கள் எனப் பெருமளவிலானோர் கலந்து கொண்டிருந்தனர்