இலங்கை இன்று முதல் வழமைக்கு திரும்புவதாக அரசாங்கம் அறிவிப்பு

9ages
9ages

கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டிருந்த இலங்கை இன்று முதல் வழமைக்கு திரும்புவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

அதற்கமைய இன்றைய தினம் முதல் பேருந்துகளில் பயணிக்க விரும்பாதவர்கள் வாடகை வாகனங்களில் பணிக்கு செல்ல சந்தர்ப்பம் வழங்கப்படுவதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

முச்சக்கர வண்டிகளில் பயணிப்பவர்களுக்கு புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. சாரதிக்கு மேலதிகமாக 2 பேர் மாத்திரமே பயணிக்க முடியும் என அவர் அறிவித்துள்ளார்.

இதேவேளை, மோட்டார் வாகனங்களில் செல்பவர் என்றால் சாரதிக்கு மேலதிகமாக 3 பேர் மாத்திரமே பயணிக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.